Tuesday, September 7, 2010

நானும் ஒரு சாகசக்காரன்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி
உள்ளங்களைக் கவரும் சூத்திரம் தெரியாத
ஏமாளிக் கூட்டத்தில் நானும் ஒருவன்!!!

சிரித்தப் பகல்களை விட அழுத இரவுகள்
எண்ணிக்கையில் அதிகம் என் வாழ்வில்!!!!

இருந்தும்,

பகுத்தறிவின் உச்சக்கட்டத்தில்
சிந்தித்துக் கொண்டிருக்கும்,
நானும் ஒரு சாகசக்காரன் தான்,,
எடுத்துக்கொண்ட நம்பிக்கையில், முயற்சியில்,
தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத்
தயங்காத சாகசக்காரன்!!!

உங்களுள் மறைக்கப்பட்ட காரியத்தின்னமான எண்ணமும்,
என்னால் வெளிப்பட்ட வீரியம் குறைந்த எண்ணமும் தான்.....
இந்தியாவின் முன்னேற்றத்திற்க்குத் தடை என்றால்
அது மிகையாகாது!!!

மாதா, பிதா, குரு, தெய்வம். என்கிற அறுந்துப்போன
வாக்கியத்தில் அறவே நம்பிக்கை இல்லை!!!!!!!
கடைசி உறவைப் போல் முதல் மூன்று உறவும்
புரியாதப் புதிராய் போகும் அவலநிலையும் உண்டு!!!

காது கேளாதவனுக்கு நிசப்தமும் நல்லிசையே,
கண் தெரியாதவனக்கு ஞாயிறும் திங்களே!!

No comments:

Post a Comment